தாயை கொன்று குழந்தையையும் கொல்ல முயன்ற இளைஞர் கைது

ராஜேஷ்குமார், தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வருகி றார். கோத்தகிரியில் உள்ள வீட்டில் லோகேஸ்வரி தனது மகன் கார்த்திகேயனுடன் தனியாக வசித்து வந்தார். கோத்தகிரியில் இருந்து 12 கிமீ தொலைவில் அம்பேத்கர் நகரில் லோகேஸ்வரி யின் பெற்றோர் வசிக்கின்றனர்.
இந்நிலையில், லோகேஸ்வ ரியை பார்க்க நேற்று வந்த அவ ரது பெற்றோர் வீட்டின் கதவு பின்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் முன்புறம் காத்திருந்துள்ளனர். வெகுநேரமானதால் செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதனால், சந்தேகம் அடைந்த அவர்கள் பின்பக்கம் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப் போது லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தையும், பேரன் கார்த்திகேயன், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டி ருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக போலீ ஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து சிறுவனை மீட்டு கோவை மருத்துவ மனைக்கும், லோகேஸ்வரியின் உடலை கோத்தகிரி அரசு மருத்துவ மனைக்கும் அனுப்பி வைத்தனர்.
லோகேஸ்வரியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச் சங்கிலி மற்றும் செல்போனை காண வில்லை. வீட்டுக்குள் கொலை நடந்திருப்பதால் கொலையாளி அறிமுகமான நபராக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக் கித்தனர். லோகேஸ்வரியின் செல் போன் தொடர்பு எண்களைக் கொண்டு விசாரித்தனர்.
இந்நிலையில், ஈரோட்டை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக் குளியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் கவுரிசங்கர்(27) என்பவரை கைது செய்துள்ளோம்.
இவருக்கும் லோகேஸ்வரிக் கும் வணிகரீதியான தொடர்பு இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறில் லோகேஸ்வரியின் கழுத்தை அறுத்து கவுரி சங்கர் கொலை செய்துள்ளார். அப்போது, லோகேஸ்வரியின் மகன் கார்த்தி கேயன் கவுரிசங்கரின் கையை கடித்தபோது குழந்தையின் கழுத் தையும் அறுத்துள்ளார்.
பின்னர், நகை மற்றும் செல் போனை திருடிக்கொண்டு தப்பி விட்டார். லோகேஸ்வரியின் செல் போன் தொடர்புகளைக் கொண்டு கவுரிசங்கரை ஈரோட்டில் கைது செய்தோம் என்றனர்.
Related :
குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது
பள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...
கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு
கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...
கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...
சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...
அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...
பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 ...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12-ம் பொதுத்தேர்வு ...
குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை ...
வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவர் அங்குள்ள போலீசாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ...
கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்
திருப்பூரில் இன்று பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஜோசியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மங்கலம் அருகேயுள்ள பாரதி புதூரைச் சேர்ந்தவர் ஜே.ரமேஷ் (எ) ...